வாருங்கள் பார்க்கலாம். பிற்காலங்களில் எந்த பிரச்சனையும் தராத வகையில் சிமெண்ட்டின் தரம் இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதற்கே இந்த சிமெண்ட் சவுண்ட்நஸ் டெஸ்ட் செய்யப்படுகிறது. சிமெண்ட்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது கடுமையடைந்த பிறகு கூட விரிவடையலாம் அல்லது சுருங்கலாம். இது கட்டிடங்களுக்கு நல்லது அல்ல. இந்த டெஸ்ட் மூலம், சிமெண்ட் கடினமான பிறகும் அதே அளவில் தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை அதை நாம் நகற்றிவிட்டால் கட்டிடங்களில் விரிசல்கள் (cracks) ஏற்படும் அபாயம் உள்ளது. சிறிது நேரத்திலையே தன்னுடைய அளவினை மாற்றிக்கொள்ளும் ஃபவுண்டேஷனை ஊற்றினால் என்னவாகும் என யோசித்து பாருங்கள். அது மொத்த கட்டமைப்பையும் பலவீனமாக்கிவிடும். இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க, கட்டுமானத்தில் சிமெண்ட்டை பயன்படுத்தும் முன் அது நிலைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கே இந்த டெஸ்ட் செய்யப்படுகிறது.
சிமெண்ட் சவுண்ட்நஸ் டெஸ்டின் முக்கியத்துவம்
சிமெண்ட்டின் தரத்தில் ஏன் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்க யோசிக்கலாம்? ஒரு கட்டிடத்தின் வலிமையும் பாதுகாப்பும், அதன் சிமெண்ட் தரத்தை சார்ந்தே உள்ளது.
சிமெண்ட் நல்லதாக இல்லை என்றால், அது விரிவடையவோ சுருங்கவோ வாய்ப்புகள் உண்டு. இதனால் விரிசல்கள் ஏற்படும். இந்த விரிசல்கள் வெறும் சிறிய சிக்கல்கள் அல்ல. காலப்போக்கில் இவை கட்டிடங்களின் ஒருங்கிணைப்பை பாதித்து, பாதுகாப்பு ஆபாயங்களை உருவாக்கிவிடும். அத்துடன், இந்த பிரச்சனைகளை சரி செய்யும் செலவும் நேரமும் அதிகமாகும். சவுண்ட்நஸ் டெஸ்ட் மூலம், இந்த பிரச்சனைகள் உருவாகும் முன்பே அவற்றை கண்டறியலாம். இதன் டெஸ்ட் மூலம், கட்டிடங்கள் பாதுகாப்புடனும் நீடித்து நிலைத்திருக்கும் திறனுடனும் அமைக்கப்பட பயன்படுத்தப்படும் சிமெண்ட்டின் தரம் சிறப்பாக இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும். . மேலும், இது சிமெண்ட் நிறுவனங்களின் நம்பகத்தன்மையும், கட்டுமான நிறுவனங்களின் மதிப்பையும் பராமரிக்க இந்த டெஸ்ட் மிகவும் அவசியமானது ஆகும். அதிக தரமுள்ள பிராஜக்ட்கள் நம்பிக்கையை வலுப்படுத்தி, வியாபாரங்களை அதிகமாக்கும். சவுண்ட்நஸ் டெஸ்ட் என்பது வெறும் ஒழுங்குமுறைகளை சரியாக பின்பற்றுவது மட்டும் அல்ல, நம்பிக்கை, பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றை உருவாக்குது ஆகும்.
சிமெண்டில் அன்சவுண்ட்நஸ் (தரமின்மை) பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வழிகள்