1. அஸ்திவாரங்கள் (பவுன்டேஷன்ஸ்)
M30 தர கான்கிரீட், அஸ்திவாரங்களை கட்டுவதற்கு ஏற்றது. இதன் 30 MPa வலிமை அதிக சுமைகளை தாங்கும் திறனை கொண்டது. எனவே, குடியிருப்புகள், உயரமான கட்டிடங்கள் மற்றும் உறுதியான அடித்தளம் தேவைப்படும் பிற கட்டமைப்புகளுக்கு ஏற்றதாக அமைகிறது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், நில அசைவுகளையும் தாங்கும் நீடித்த தன்மையும் இதில் உள்ளது.
2. ஸ்லாப்ஸ் (அடுக்குகள்)
M30 தர கான்கிரீட் மிகுந்த வலிமையைக் கொண்டதால் ஸ்லாப் கட்டுமானத்திற்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. அதிக சுமை தாங்கும் திறன் தேவைப்படுவதால், இது தரை மற்றும் கூரைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. பிளாட் ஸ்லாப்(சமத் தள ஸ்லாப்), ரிப்பெட் ஸ்லாப் (அச்சுகளுடன் கூடிய ஸ்லாப்) போன்ற நவீன கட்டுமானத்தில் பயன்படும் பல்வேறு வகையான ஸ்லாப்கள், M30 கான்கிரீட்டின் வலிமையால் பயனடைகின்றன.
3. பீம்ஸ்
பீம்கள் என்பது ஒரு கட்டிடத்தின் ஸ்லாப்களிலிருந்து தூண்கள் மற்றும் அஸ்திவாரங்களுக்கு சுமைகளை எடுத்துச் செல்லும் பொறுப்பைக் கொண்டுள்ளன. இவற்றில் M30 தர கான்கிரீட்டை பயன்படுத்துவதன் மூலம், அவற்றில் தேவையான வலிமையும், இறுகும் தன்மையும் கிடைக்கிறது. மேலும் கட்டிடத்தின் ஒட்டுமொத்த அமைப்புத் தரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. M30 கலவையின் சமநிலையான விகிதம், பீம்களின் நீடித்த தன்மையையும், நீண்ட ஆயுளையும் அதிகரிக்கிறது.
4. தூண்கள் (காலம்ஸ்)
பீம்களைப் போலவே, தூண்களும் M30 தர கான்கிரீட்டின் பயன்களை பெரிதும் அனுபவிக்கின்றன. இவை கட்டிடத்தின் மேலிருந்து வரும் பாரத்தை தாங்கி, அதன் நிலைத்தன்மையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. M30 தரக் கான்கிரீட்டின் வலிமை. தூண்களுக்கு தேவையான அழுத்த பாரங்களை தாங்கும் திறனுடன் வடிவமைக்க உதவுகிறது. மேலும் இது சுற்றுச்சூழல் தாக்கங்களையும் எதிர்த்து, கட்டுமானத்தின் பாதுகாப்பையும் நீடித்த பயன்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது.
M30 தரக் கான்கிரீட்டின் கலவைக் விகிதத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணங்கள் யாவை?
M30 விகிதக் கான்கிரீட்டின் தரத்தையும் பண்புகளையும் பல காரணங்கள் பாதிக்கக்கூடும். இவற்றை புரிந்து கொள்வதன் மூலம், தேவையான வலிமை மற்றும் நீடித்துழைக்கும் தன்மையைப் பெறும் வகையில் கலவையை உருவாக்க முடியும்.
1. நீர்-சிமென்ட் விகிதம்:
கான்கிரீட்டின் வலிமையும் வேலைத்திறனையும் தீர்மானிப்பதில் நீர்-சிமெண்ட் விகிதம் மிகவும் முக்கியமானதாகும். இதில் அதிகமான நீர் சேர்த்தால் வலிமை குறைகிறது, குறைவான நீர் சேர்த்தால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. M30 தரக் கான்கிரீட்டில், இந்த சமநிலையை பெற 0.40 முதல் 0.50 வரை நீர்-சிமெண்ட் விகிதம் பரிந்துரைக்கப்படுகிறது.
2. மூலப்பொருட்களின் தரம்:
கான்கிரீட்டின் வலிமையும் நீடித்த தன்மையும், அதில் பயன்படுத்தப்படும் சிமெண்ட், மணல் மற்றும் கூட்டுப்பொருட்களின் தரத்தை பொறுத்தே உள்ளது. உயர் தரமான மூலப்பொருட்களை பயன்படுத்தினால் M30 கலவை விகிதம் நம்பகமாகவும் நிலைத்தும் இருக்கும். இதன் மூலம் கான்கிரீட் எதிர்பார்க்கப்படும் செயல்திறன் அதிகரிக்கிறது.
3. கலவை நுட்பம்
கான்கிரீட்டின் அனைத்து மூலப்பொருட்களும் சரியான அளவில் கலந்து, எல்லா பகுதிகளிலும் சமமாகப் பகிரப்பட வேண்டும். கலவை முறையில் தவறுகள் இருந்தால், கான்கிரீட்டில் பலவீனமான பகுதிகளை உருவாக்கும், இது M30 தரக் கான்கிரீட்டின் மொத்த வலிமையும் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையும் பாதிக்கக்கூடும்.
4. கியூரிங்(பராமரிப்பு) நிலைகள்
கான்கிரீட் வலிமையாக வளரக்கூடிய ஆரம்ப காலகட்டத்தில் போதுமான ஈரப்பதமும் வெப்பநிலையும் சரியாக பராமரிக்க வேண்டும். இந்த செயல்முறை கியூரிங் எனப்படும். சிறந்த கியூரிங், M30 தரக் கான்கிரீட்டின் அதிகபட்ச வலிமை மற்றும் நீடித்த தன்மையை அடைய உதவுகிறது. குறைவான கியூரிங் காரணமாக கான்கிரீட் பலவீனமாகவும், குறைவான வாழ்நாளுடன் இருக்கும்.
5. சுற்றுச்சூழல் நிலைமைகள்
வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் காரணங்கள், கான்கிரீட்டின் இறுகும் கியூரிங் போன்ற செயல்களில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. அதிக வெப்பநிலைகள் உறைதல் காலத்தை வேகப்படுத்தவோ தாமதப்படுத்தவோ செய்திடும், மேலும் இது M30 தரக் கான்கிரீட்டின் வலிமை வளர்ச்சியை பாதிக்கலாம்.
6. ரசாயனச் சேர்க்கைகள்
சேர்க்கைப் பொருட்களைப் பயன்படுத்தப்படும்போது, கான்கிரீட்டின் பண்புகளை மாற்ற முடியும் – இது அதன் வேலை செய்யும் திறனை அதிகரிக்கவோ, அல்லது செட் ஆகும் நேரத்தை வேகப்படுத்தவோ பயன்படுத்தப்படலாம். எனவே, M30 தரக் கான்கிரீட்டின் செயல்திறனை உயர்த்த, சரியான சேர்க்கைகள் மற்றும் அவற்றின் அளவுகளை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம்.