அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. ப்ரீகாஸ்ட் கான்க்ரீட்னா என்ன?
ப்ரீகாஸ்ட் கான்க்ரீட் கட்டுமானம் என்பது, கட்டுமான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பு, கட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சாலை சூழலில் கான்க்ரீட் கூறுகளை வார்த்து பக்குவப்படுத்துவதை உள்ளடக்கியது. சுவர்கள், பீம்கள் அல்லது ஸ்லாப்கள் போன்ற இந்தத் தயார்நிலை கூறுகள் பின்னர் கட்டுமான இடத்தில் பொருத்தப்படுகின்றன, இது வேகமான மற்றும் திறமையான கட்டுமானத்தை அனுமதிக்கிறது.
2. ப்ரீகாஸ்ட் செய்ய எந்த வகையான கான்க்ரீட் பயன்படுத்தப்படுகிறது?
ப்ரீகாஸ்ட் கான்க்ரீட் தயாரிப்பில் குறிப்பிட்ட கட்டமைப்பு மற்றும் அழகியல் தேவைகளுக்காக உயர்தர மற்றும் உறுதியான கான்க்ரீட் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. வேலைத்திறன், காயும் நேரம், வானிலை மற்றும் ரசாயன பாதிப்புகளைத் தாங்கும் வகையில் இதில் சேர்க்கைப் பொருட்கள் கலக்கப்பட்டு, இறுதி தயாரிப்பு வலிமையாகவும் நீடித்த உழைப்பைத் தருவதாகவும் உறுதி செய்யப்படுகிறது.
3. ப்ரீகாஸ்ட் கான்க்ரீட்டை எப்போது பயன்படுத்த வேண்டும்?
வேகமான கட்டுமானம் மற்றும் சீரான தரம் தேவைப்படும் திட்டங்களுக்கு ப்ரீகாஸ்ட் கான்க்ரீட் சிறந்தது. பெரிய அளவிலான கட்டிடங்கள் அல்லது ஒரே மாதிரியான பாகங்கள் மீண்டும் மீண்டும் தேவைப்படும்போது இது மிகவும் வசதியாக இருக்கும்.
4. ப்ரீகாஸ்ட் கான்க்ரீட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
தொழிற்சாலையில் உள்ள அச்சுக்களில் கான்க்ரீட் ஊற்றப்பட்டு, வலிமை மற்றும் சீரான தன்மையை உறுதிப்படுத்தக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் காயவைக்கப்படுகிறது. பின்னர், அந்த பாகங்கள் கட்டுமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்படுகின்றன.
5. ப்ரீகாஸ்ட் கான்க்ரீட்டில் வெடிப்புகள் ஏற்படுமா?
மற்ற கான்க்ரீட்களைப் போலவே ப்ரீகாஸ்ட் கான்க்ரீட்டிலும் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது, ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி செயல்முறை இந்த அபாயத்தைக் குறைக்கிறது. தரக்கட்டுப்பாடும் முறையான பராமரிப்பும், கட்டுமான இடத்தில் நேரடியாக ஊற்றப்படும் கான்க்ரீட்டை விட இதில் வெடிப்புகளைக் கணிசமாகக் குறைக்கின்றன.