Share:
Share:
• மண்ணின் வகை, கட்டுமான திட்டங்களின் நிலைத்தன்மையை அதிகமாக பாதிக்கும்.
• மணற்பாங்கான மற்றும் பசளைமண்கள் அவற்றின் நீர் மேலாண்மை மற்றும் நிலைத்தன்மையின் காரணமாக ஃபவுண்டேஷன்களைக் கட்டுவதற்கு சிறப்பானவை ஆகும்.
• களிமண் மற்றும் பீட் மண்கள், முறையே அவற்றின் விரிவடையும் தன்மை மற்றும் அதிக நீர் தக்கவைப்பு காரணமாக ஏற்றதல்ல.
• கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன் தள ஆய்வு மற்றும் மண் பரிசோதனை முக்கியமானதாகும்.
அனைத்து கட்டுமானமும் வலுவான மற்றும் நிலையான மண்ணில் கட்டப்பட வேண்டும். மண்ணின் வலிமை அதன் புறநிலை பண்புகளைச் சார்ந்ததாகும். கட்டிடத்தின் கீழே உள்ள மண் வலுவாக இல்லை என்றால், ஃபவுண்டேஷனில் விரிசல் ஏற்படுவதற்கு, உடைவதற்கு மற்றும் அதன் விளைவாகக் கட்டிடம் இடிந்து விழுவதற்கு அது வழிவகுக்கக்கூடும்.
நீங்கள் சரியான முடிவை எடுப்பதற்கு உதவுவதற்காக ஃபவுண்டேஷனைக் கட்டுவதற்கான வெவ்வேறு வகை மண்கள் மற்றும் அவற்றின் பண்புகள் பின்வருமாறு:
கட்டுமானத்தில் பலவகையான மண்களின் மத்தியில் மணல்/சரளை மண் பெரிய துகள்களைக் கொண்டிருக்கும். பெரிய துகள்களின் காரணமாக, இந்த வகை மண் தண்ணீரைத் தக்கவைக்காமல் விரைவாக வடியச்செய்துவிடும் என்பதால் கட்டிடங்களுக்கு சிறந்ததாகும். இறுக்கமான மணல்/சரளை மண் இன்னும் அதிகமான நிலைத்தன்மையை வழங்குகிறது மற்றும் அவற்றின் மீது ஃபவுண்டேஷனைக் கட்டுவது சிறந்ததாகும்.
களிமண் என்பது கட்டிடங்களின் ஃபவுண்டேஷனுக்கு பயன்படுத்துவதற்கேற்ற மெட்டீரியல் அல்ல. வெவ்வேறு பருவங்களில் சுருங்கும் மற்றும் விரிவடையும் அதன் இயல்பு, கட்டிடத்தின் ஃபவுண்டேஷனில் விரிசல்கள் அல்லது வெடிப்புகளுக்கு வழிவகுக்கிறது. களிமண் ஃபவுண்டேஷன்கள் வழக்கமாகப் போதுமான நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக ஆழமாக அமைக்கப்படும். களிமண்ணில் உள்ள நுண்துகள்கள் தண்ணீரை நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக்கொள்ளும். அதிகமான மாற்றங்கள் ஃபவுண்டேஷனில் கணிசமான அளவு அழுத்தத்தைச் செலுத்தலாம்.
பசளைமண் என்பது கட்டுமானத்திற்கான சிறந்த மண் வகைகளில் ஒன்றாகும். இது மணல், வண்டல்மண் மற்றும் களிமண்ணின் சரியான கலவை ஆகும். இது ஃபவுண்டேஷனை வலிமையானதாக்குகிறது. பசளை மண் தண்ணீருடன் சேரும்போது சுருங்காது, விரிவடையாது அல்லது ஷிஃப்ட் ஆகாது. பசளை மண்ணில் உள்ள ஒரே குறைபாடு என்னவென்றால், இந்த வகை மண்ணின் உட்கூறுகளில் அழுகாத பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது, கட்டுமானத்திற்கு முன் அதை வடிகட்ட வேண்டும்.
பீட் மண் என்பது சதுப்பு நிலங்கள் மற்றும் ஈர நிலங்கள் போன்ற பகுதிகளில் காணப்படும். இது முதன்மையாக ஆர்கானிக் பொருட்களையும் செடிகளையும் கொண்டிருக்கும். இது அதிக அளவிலான தண்ணீரைத் தக்கவைத்துக்கொள்வதால் கட்டுமானத்திற்கு ஏற்றதல்ல. பீட் ஃபவுண்டேஷனில் அதிகமாக விரிசல் ஏற்படும் ஆபத்துள்ளது, ஷிஃப்ட் ஆகக்கூடும் மற்றும் குறைவான பாரம் தாங்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த வகை ஃபவுண்டேஷனில் நீங்கள் கட்டிடம் கட்டினால், சேதம் ஏற்படுவதற்கான ஆபத்து மிகவும் அதிகமாகும்.
சுண்ணாம்புக்கல், கடினமான சுண்ணக் கட்டி முதலியன அனைத்தும் நல்ல தாங்கும் திறன் கொண்டுள்ளதால் அவை ஃபவுண்டேஷனுக்கு ஏற்றவை ஆகின்றன. அடிப்பாறை மிகவும் நிலையானதாகவும், தண்ணீரால் ஏற்படும் சேதங்களை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது. அடிப்பாறையில் கட்டிடம் கட்டும்போது நினைவில் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம், அது நன்கு சமன்செய்யப்பட்டதை உறுதி செய்வதாகும்.
பல ஆப்ஷன்களுடன், கட்டுமானத்தில் மண் வகைகளைக் கருத்தில் கொள்ளும்போது மனதில் வைத்திருக்க வேண்டிய குறிப்பிட்ட விஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தின் ஃபவுண்டேஷனும் வலுவாக, திறன்மிக்கதாக மற்றும் நன்கு கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். பயன்படுத்தப்படும் மண் வகை அதன் பண்புகளின் அடிப்படையில் ஃபவுண்டேஷன் மீது வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக, அதிகமான பாறைகள், மணல் மற்றும் சரளைக்கல் உள்ள மண்கள் வலுவானவை ஆகும், மேலும் அவற்றால் மாறும் பருவநிலைகளைத் தாங்கி நிற்க முடியும். தண்ணீருடன் சேரும்போது அதிகமாக விரிவடையாத அல்லது சுருங்காத மண்ணைத் தேர்வு செய்யவும். ஆர்கானிக் பொருட்கள் உள்ள மண்கள் அதிகமாக தண்ணீரைத் தக்கவைக்கும் திறனை பெற்றுள்ளன, இதன் விளைவாக ஃபவுண்டேஷன் ஷிஃப்ட் ஆகும் மற்றும் விரிசல் அடையும். கட்டுமானத்திற்கான நல்ல மண்கள் மெட்டீரியலின் அரிமானத்தைத் தடுக்கும் சமநிலையான வேதியலைக் கொண்டிருக்க வேண்டும்.
இறுதியில், ஃபவுண்டேஷன்களைக் கட்டுவதற்கான சரியான மண் வகைகளைத் தேர்ந்தெடுப்பது எந்தவொரு கட்டமைப்பின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நீண்ட ஆயுளை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படிநிலை ஆகும். ஒவ்வொரு முக்கியமான மண் வகைகளும் தனக்கென்று தனித்துவமான பண்புகளுடன் வருகின்றன, மேலும் இந்த பண்புகளைப் புரிந்துகொள்வது பொறியாளர்கள் மற்றும் பில்டர்களுக்கு முக்கியமானதாகும். அது விரிவடையக்கூடிய களிமண், மணற்பாங்கான மண் அல்லது பசளைமண்ணாக இருந்தாலும் சரி, தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு முறையான தள ஆய்வு மற்றும் மண் பரிசோதனை அவசியமானதாகும்.