உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…
குடியிருப்புக்காக அல்லது வணிகப் பயன்பாட்டிற்காக வாங்குவதற்காக நீங்கள் ஒரு மனையைத் தேர்ந்தெடுக்கும்போது, வாஸ்த்துவின்படி நிலத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். ஏனென்றால், மனை என்பது அசையாத நிலையான ஒன்றாகும், எனவே அது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்துவதையும் எதிர்மறை ஆற்றலில் இருந்து விலகி இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வீட்டிற்கான வாஸ்த்து சாஸ்திரம் மனை வாஸ்த்துவிலிருந்து வேறுபட்டதாகும். அதனால், நீங்கள் வாங்கிய மனை சரியானதா இல்லையா என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இதை வாசிப்பது அனைத்தையும் விரிவாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
முதலில், ஒரு மனையை வாங்குவதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய வாஸ்த்து வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரிவில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மூன்று முக்கியக் குறிப்புகள் உள்ளன :
நேர்மறைத்தன்மையைப் பரவச்செய்வதற்காக உங்களின் மனையானது அமைதியான, சாந்தமான ஒரு இடத்தில், சுற்றியும் பச்சைபசேலென்று இருக்கும் வகையில் இருக்க வேண்டும். வளமான மண், மனையைச் சுற்றி நல்ல மண் இருப்பதைக் குறிக்கும். மனை வாஸ்த்துவைத் தொடர்வதற்கு முன், மனையில் நின்று அதன் அதிர்வுகளை உணர்வது நல்லது. நீங்கள் அங்கு இருக்கும்போது நேர்மறையாக உணர வேண்டும். எவ்வகையான கெட்ட அல்லது எதிர்மறை எண்ணங்களும் புறக்கணிக்கப்பட வேண்டும்.
வாஸ்த்துவின்படி நிலத்தைத் தேர்ந்தெடுப்பதின் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று மனையின் திசையமைப்பு ஆகும். வாஸ்த்து வழிகாட்டுதல்களானது அறிவியல் சார்ந்த பகுத்தறிதல் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் இருக்கும். எந்தவொரு நகரத்திலும், சாலையின் இருபுறங்களிலும் வீடுகள்/அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும், மேலும் நான்கு திசைகளிலும் வீடுகள் இருக்கும்போது அந்த நகரம் மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும். அதனால், மனை வாஸ்த்துவின்படி, நான்கு திசைகளும் நல்லது எனக் கருதப்படுகிறது. கிழக்கு திசையை நோக்கி இருப்பது அறிஞர்கள், பூசாரிகள், தத்துவவாதிகள், பேராசிரியர்களுக்கு ஏற்றது, வடக்கு திசையை நோக்கி இருப்பது அதிகாரத்தில், நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றது, தெற்கு திசையை நோக்கி இருப்பது வணிகம் செய்பவர்கள் மற்றும் நிர்வாக மட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஏற்றது அதேசமயம் மேற்கு திசையை நோக்கி இருப்பது சமூகத்தில் ஆதரவு சேவைகளை வழங்குபவர்களுக்கு மிகவும் ஏற்றது.
வீட்டுக் கட்டுமானத்தின் வெவ்வேறு கட்டங்களைத் தொடங்குவதற்கு முன், அந்த நிலம் முன்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதைச் சரிபார்ப்பது முக்கியமாகும். விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மனையைத் தேர்ந்தெடுப்பது நல்லது, ஏனெனில், அது மிகவும் வளமான மண்ணைக் கொண்டிருக்கும். பொதுவாக, விவசாயத்திற்கு ஏற்ற மண், அடித்தளத்தின் கட்டுமானத்திற்கும் ஏற்றதாக இருக்கும். அதேசமயம், கரிசல் மண் விவசாயத்திற்கும் கட்டுமானங்களுக்கும் ஏற்றதல்ல, ஏனெனில் அது நீரைத் தக்கவைத்து அடித்தளத்தில் ஈரத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். மேலும், பாறை நிறைந்து நிலத்தைக் கட்டுமானத்திற்குத் தவிர்க்கவும். புழுக்கள் அதிகமாக இருக்கும் நிலத்தையும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது மண் தளர்வாக இருப்பதைக் குறிக்கிறது.
மனையைச் சுற்றியுள்ள சாலை அமைப்பை அடுத்ததாகக் கருத்தில் கொள்ள வேண்டும். கீழே சில சுட்டிக்காட்டிகள் உள்ளன :
நல்ல மனை :
நடுத்தரமான மனை :
மோசமான மனை :
மனை வாஸ்த்துவின் மற்றொரு முக்கியமான அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட மனை அல்லது நிலத்தின் வடிவமாகும். கீழே உள்ளவை தான் நான்கு மிகவும் பொதுவான வடிவங்களாகும் :
செவ்வக வடிவிலான மனை : 1:2 என்ற விகிதத்தில் நீளம் மற்றும் அகலத்தைக் கொண்டுள்ள ஒரு மனையானது வாஸ்த்துவின்படி நல்ல நிலத் தேர்வாகக் கருதப்படுகிறது. நீளம் வடக்கு திசையை நோக்கியும், அகலம் மேற்கு திசையை நோக்கியும் இருந்தால், அது மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய மனைகள் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், செழிப்பையும் வழங்குகின்றன.
முக்கோண வடிவிலான மனை : முக்கோண வடிவிலான மனை நல்லதல்ல. வாஸ்த்துவின்படி அத்தகைய மனைகளில் தீப் பிடிப்பதற்கும் சேதம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
நீள்வட்ட வடிவிலான மனை : அத்தகைய வடிவங்கள் வீடுகளைக் கட்டுவதற்கு ஏற்றதாகக் கருதப்படுவதில்லை. வாஸ்த்துவின்படி, அத்தகைய மனைகள் அதன் உரிமையாளர்களுக்குத் துரதிர்ஷ்டத்தையே கொண்டுவரும்.
வாஸ்த்துவின்படி, ஒருவர் நிலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் மனையின் சீரான அமைப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் :
நீங்கள் குடியிருப்பு நோக்கங்களுக்காக மனை வாஸ்த்துவைப் பார்க்கிறீர்கள் என்றால், பிறகு அது சமவெளி நிலமாக இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். ஒருவேளை, மனை சரிவாக இருந்தால், தென்மேற்கு அல்லது வடகிழக்கை நோக்கிச் சரிந்திருக்கும்பட்சத்தில் அது அனுகூலமானதாக இருக்கும். மேற்கு நோக்கிச் சரிந்திருந்தால், அது குடும்பத்தினர்களிடையே ஒற்றுமையின்மையைக் குறிக்கிறது மற்றும் உடல்நலத்திற்குக் கேடு உண்டாக்கலாம்.
இதுதான் உங்களின் மனை வெற்றி மற்றும் மகிழ்ச்சியால் ஆசீர்வதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சில வாஸ்த்து குறிப்புகளாகும். வாஸ்த்துவின்படி மனையை வாங்குவதற்கு முன் அல்லது நிலத்தைத் தேர்ந்தெடுக்கச் செல்வதற்கு முன் இவற்றை மனதில் வைத்துக்கொள்ளவும். ஒரு வீட்டைக் கட்டுவதற்கான செலவைக் கணக்கிட்டு, மனை வாஸ்த்துவை இறுதி செய்வதற்கு முன், ஒரு மனையை வாங்குவதற்கான சட்டத் தேவைகளைப் புரிந்துகொள்வது நல்லது. அதை நீங்கள் எங்களின் கட்டுரையில் விரிவாகப் புரிந்துகொள்ளலாம் : https://www.ultratechcement.com/home-building-explained-single/5-must-have-documents-to-avoid-legal-hassles-later